விபத்து அபாயம்

Update: 2025-08-24 07:48 GMT

தாழக்குடி பேரூராட்சி சீதப்பால் அருகே பூலாங்குழி கிராமத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் அருகில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையிலும், அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து காணப்படும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன், சீதப்பால்.

மேலும் செய்திகள்