ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-08-10 07:40 GMT

ஈத்தாமொழிக்கு செல்லும் சாலையில் வடக்கு சூரங்குடி பகுதியில் கனரக மற்றும் இருசக்கர வாகனங்கள், அரசு பஸ்கள் என எப்போது வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் ஒரு தனியார் மருத்துவமனையின் அருகில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், வண்ணான்விளை.

மேலும் செய்திகள்