திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் சோபனபுரம் ஊராட்சி ஓசரப்பள்ளி 5-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சில மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி பொதுமக்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களும் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.