திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி ஸ்ரீதேவி நகர் பகுதியில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுக்க விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.