புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பேப்பர் மில் ரோடு பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்கு பழுதடைந்து கடந்த நீண்ட நாட்களாக எரியாமல் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதுடன், இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிபறி உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் பொதுமக்கள், பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, எரியாமல் உள்ள உயர் கோபுரம் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.