நாகர்கோவில் இளங்கடை பகுதியில் இருந்து மணக்குடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மதப்பாடசாலையின் எதிரே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சாலையை நோக்கி சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கம்பம் சாலையில் முறிந்து விழுந்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மது யூசுப், இடலாக்குடி.