தெருவிளக்குகள் இருந்தும் பயனில்லை

Update: 2025-06-29 17:55 GMT

திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் அருகில் சாலையோரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின் விளக்குகளின் அருகே மரங்கள் வளர்ந்து படர்ந்து காணப்படுவதால் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியும்போது இந்த சாலையில் போதிய வெளிச்சங்கள் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டும் பயன் இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்