புவனகிரி பூராசாமிதோப்பு பகுதியில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்று இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நிறுவ மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.