பண்ருட்டி அடுத்த பெத்தாங்குப்பம், வானமாதேவி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் சீரான மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.