பாபநாசம் கபிஸ்தலம் பகுதி மேலகபிஸ்தலம்,ராமானுஜபுரம்,உமையாள்புரம், தென்சருக்கை,வடசருக்கை,சத்தியமங்கலம்,வாழ்க்கை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வீட்டில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மின்தடை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.