ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பரம்பையில் இருந்து பரம்பை செல்லும் கான்கிரீட் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்துடன் இனைக்கபட்டுள்ள மின்விளக்கு பல நாட்களாக பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின் விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், பரம்பை.