செயல்படாத மின்கட்டண வசூல் மையம்

Update: 2025-06-15 14:11 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் உள்ள மின்கட்டண வசூல் மையம் கடந்த 2 மாதமாக செயல்படவில்லை. இதனால் மின் கட்டணம் கட்ட முடியாமல் மின் நுகர்வோர் அவதிப்படுகின்றனர். தனியார் இ- சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாலுகா தலைமை இடத்தில் உள்ள மின்கட்டண வசூல் மையம் செயல்படாமல் இருப்பது இப்பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது. எனவே மின்கட்டண வசூல் மையம் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்