கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா, முதலைப்பட்டி கிராமத்தில் உள்ள பாரதிநகரில் உள்ள 3-வது குருக்கு தெருவில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சமின்றி சென்று வரும் வகையில் இந்த மின்கம்பத்தில் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மின்விளக்கு கடந்த சுமார் 6 மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதி பெண்கள் இரவு நேரத்தில் இந்த வழியாக நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.