திட்டக்குடி அடுத்த கொக்கை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.