தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2025-06-08 11:18 GMT

தஞ்சை மேலவெளி ஊராட்சி ஜெபமாலைபுரம் புதுத்தெருவில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த சில நாட்களாக ஒளிராமல் இருந்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்