புதுக்கோட்டை மாவட்டம் வளவம்பட்டியிலிருந்து சோத்துப்பாளை செல்லும் சாலையில் அம்மையன்தெரு சந்திப்பில் குடியிருப்பு பகுதியில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் சிதலமடைந்த மின் கம்பத்தின் அருகே தற்போது புதிய மின் கம்பம் அமைத்துள்ளனர். ஆனால் பழைய மின் கம்பத்தில் உள்ள மின் இணைப்பை புதிய மின் கம்பத்திற்கு மாற்றாமல் உள்ளனர். எனவே பலத்த காற்று அடிக்கும்போது இந்த மின் கம்பம் முறிந்து கீழே விழுந்தால் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.