திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா ஓலையூர் ஸ்ரீ பாலன் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோரம் முறையாக தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.