விபத்து அபாயம்

Update: 2025-06-08 09:02 GMT

நாகர்கோவில் இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் வையாழி தெருவின் எதிரே சாலையோரத்தில் ஒரு புதிய உயரழுத்த மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சாலையை நோக்கி எப்போது வேண்டுமானாலும் சாய்ந்த விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்