கோவையை அடுத்த மோத்தேபாளையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அன்றாட வேலைகளை கவனிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமப்படுகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடிவது இல்லை. உணவு சமைக்க எந்தவொரு மின்சாதன பொருட்களையும் பயன்படுத்த முடியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகிறார்கள். இதுபோன்று வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சீராக மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.