ராமாபுரம் ஊராட்சி குறிஞ்சிநகர் பகுதியில் மின்மாற்றி இல்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் மின்வினியோகம் செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக மின்மாற்றி அமைத்து பொதுமக்களுக்கு சீரான முறையில் மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.