புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பெருநாவலூர் ஊராட்சியை சேர்ந்த பரமந்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே செல்லும் மின்கம்பிகள் செல்கின்றன. தற்போது இந்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. மேலும் அவற்றின் மீது அருகில் உள்ள மரக்கிளைகள் உரசியவாறு செல்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.