ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-06-01 13:25 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் இந்திரா காலனி முதல் வீதியில் சாலையோரம் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் அடிப்பகுதி மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்