கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நகர பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிப்பு செய்யப்படாமல் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கோடை காலத்தில் இந்த மின் வெட்டால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.