நடவடிக்கை தேவை

Update: 2025-06-01 10:31 GMT

நாகர்கோவில் பொதுபணித்துறை அலுவலகம் தெற்கு பகுதியில் புலவர்விளை என்.வி.தெரு உள்ளது. இந்த தெருவின் வடக்கு பகுதியில் நிற்கும் ஒரு மின்கம்பத்தின் மீது பொதுப்பணித்துறை அலுவத்தில் நிற்கும் மரத்தின் கிளை உரசியபடி காணப்படுகிறது. மழை நேரங்களில் மரக்கிளை உரசுவதால் தீப்பொறி எழும்புகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மின்கம்பத்தின் மீது உரசும் மரக்கிளையை வெட்டி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்னேஷ்,கணேசபுரம்.

மேலும் செய்திகள்