பழனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளான சிவகிரிப்பட்டி, புதுநகர் ஆகிய பகுதிகளில் பகல் மட்டுமின்றி இரவு வேளைகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் வீட்டில் உள்ள முதியோர்கள், குழந்தைகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் மின்தடையை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.