ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-05-18 15:44 GMT

திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சியில் துவரங்குறிச்சி-கஸ்தப்பட்டி செல்லும் சாலை ஓரத்தில் பொன்னம்பட்டி குளத்தின் அருகே மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்