புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள ஒசுவப்பட்டி கிராமத்தில் விவசாயி வயல்கள் வழியாக உயரழுத்த மின்கம்பம் செல்கின்றது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்கள், விவசாயிகள் இப்பகுதியில் நடந்து செல்லும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.