எரியாத விளக்கு

Update: 2025-05-11 06:58 GMT

குளச்சலில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் ஈத்தாபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின் விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமது சபீர், குளச்சல்.

மேலும் செய்திகள்