மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் பஸ் நிறுத்தம் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.