எரியாத தெருவிளக்குகள்

Update: 2025-04-27 12:44 GMT

அரியலூரில் உள்ள காலேஜ் ரோடு பகுதியானது அதிகளவில் கடைகள், வீடுகள் கொண்ட பகுதியாகும். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமம் அடைகின்றனர். சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அதில் விடுகின்றனர். இதனால் வாகனங்களில் பழுது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தெருவிளக்குகள் முறையாக எரிவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்