பண்ருட்டி அருகே பக்கிரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின்கம்பம் மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் எலும்புகூடாக காட்சி அளிக்கும் அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பத்தை அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.