புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கணபதிபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கந்தர்வக்கோட்டை செல்லும் சாலையில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எரியாமல் உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்களும், விபத்தும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.