எரியாத தெருவிளக்குகள்

Update: 2025-03-09 15:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி பத்தகாடு கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள பத்தகாடு கிராமத்தில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இந்த வழியாக கடைவீதிக்கு செல்ல இப்பகுதி மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்