எரியோடு தபால் நிலையம் அருகே சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.