திங்கள்சந்தையில் இருந்து செட்டியார்மடம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மருடன் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்து காணப்படும் மின்கம்பங்களை அகற்றி புதிய கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.