மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2025-02-09 13:51 GMT
திருச்சி மாநகராட்சி 40-வது வார்டில் உள்ள மேம்பாலத்தில் இடபுறமும் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் கடும் இருட்டாக காணப்படுகிறது. இதனை வைத்து சமூக விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், இரவு நேரங்களில் யாரும் தனியாக நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்