திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாங்குழி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோர மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் பழுதடைந்து சீராக எரிவதில்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகள் பொருத்தி எரியவைக்க வேண்டும்.
-ஜோசப், மாங்குழி.