கரூர் மாவட்டம், புகளூர் தாலுகா நன்செய் புகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட முக்கியமான தார்சாலையின் ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டு அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் சாலையில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.