பட்டுக்கோட்டை பகுதி முத்துப்பேட்டை சாலை புதிய வீட்டு வசதி வாரிய பஸ் நிறுத்தம் முதல் பொன்னவராயன்கோட்டை பள்ளிக்கூடம் பஸ் நிறுத்தம் வரை மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. ஒருசில மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. மின்விளக்குகள் ஒளிராததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.