மின்விளக்கு சரி செய்யப்படுமா?

Update: 2024-12-15 14:01 GMT
திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் கிழக்கு கோபுர நுழைவுவாசலில் இருந்து ஶ்ரீசங்கேஸ்வரர் சன்னதி வரை செல்லும் இடைப்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் பலமாதங்களாக மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்த நிலையே உள்ளது. இதனால் அவ்வழியே கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் அச்சத்துடேன சென்று வருகின்றனர். மேலும் தெற்கு வாசல் உட்புறம் மேல்புறத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வண்டிகள் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
,

மேலும் செய்திகள்