சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

Update: 2024-08-04 16:54 GMT

திருச்சி மாவட்டம், மணிகண்டத்தில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எசனப்பட்டி, பூங்குடி வழியாக திண்டுக்கல் சாலையை இணைக்கும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக மதுரை சாலையில் இருந்து திண்டுக்கல் சாலைக்கு செல்பவர்கள், திண்டுக்கல் சாலையிலிருந்து மணிகண்டம் வழியாக மதுரை சாலையில் சென்று ரிங் ரோடு வழியாக புதுக்கோட்டை சாலை மற்றும் தஞ்சாவூர் சாலைக்கு செல்பவர்கள் இந்த சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த சாலையில் பூங்குடி ரெயில்வே கேட் அருகே குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் சாலையோரத்தில் அப்பகுதி விவசாய நிலங்களின் கிணறுகளுக்கு செல்லும் மும்முனை மின்சார மின்கம்பிகளை தாங்கிய மின் கம்பங்களில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றால் கீழே விழுந்தது. இதேபோல் மணிகண்டம் ஒன்றியம், அருவாகுடி கிராமத்தை ஒட்டிய ரெயில்வே கேட் பகுதியில் சாலையோரத்தில் 2 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்