ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-07-21 11:32 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களில் மின்சாரக் கம்பங்கள் நடப்பட்டு அதில் உள்ள மின்சார கம்பிகள் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் விவசாய நிலங்களை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் இவற்றில் சில மின்கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்