ஆபத்தான மின்மாற்றி

Update: 2024-07-21 11:32 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை ஊராட்சிக்குட்பட்ட புது தெரு பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எதிரே மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மாற்றியை தாங்க கூடிய சிமெண்டு கம்பங்கள் மற்றும் பக்கவாட்டு மின்கம்பங்கள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. அவ்வப்போது இந்த கம்பங்களில் உள்ள சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து அதில் உள்ள கம்பிகள் தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்