ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-07-14 17:25 GMT

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த புத்தூர் கிராமத்தில் இருந்து பேரூர் செல்லும் தார் சாலை அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Heading

Content Area


மேலும் செய்திகள்