தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2024-07-14 12:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து கேசராப்பட்டி வழியாக உலகம்பட்டி செல்லும் சாலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இரவு நேரத்தில் செல்லும் பெண்கள், பள்ளி மாணவ- மாணவிகள் பெரிதும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்