எரியாத தெருவிளக்குகள்

Update: 2024-07-14 10:45 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது சேலத்தார் காடு கிராமம். இந்த கிராமம் பெரிய திருக்கோணம் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அதிகளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக தினந்தோறும் பொதுமக்கள் அதிகளவில் வெளியூர்களுக்கு கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவு நேரங்களில் நடந்தே வீட்டிற்கு வருகின்றனர். இங்கு முதன்மை சாலையில்லுள்ள 15 மின் கம்பங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் பழுதடைந்து அடர்ந்த இருளாகவே உள்ளது . இங்கு வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்