ஆபத்தான மின் மாற்றி

Update: 2024-07-07 13:31 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி தனியார் வங்கி எதிரே உள்ள மின்மாற்றியில் இருந்து வெண்ணெய்மலை, பசுபதிபாளையம், பேங்காலனி மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த மின் மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் மாற்றி இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்