மின்விளக்கு வேண்டும்

Update: 2024-06-30 16:47 GMT

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது நாடார் காலனி. இங்குள்ள நான்கு ரோடு சந்திப்பில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு ஏற்கனவே இருந்த உயர் கோபுர மின்விளக்கு சேதமடைந்ததால் அகற்றப்பட்ட நிலையில் தற்போது இரவு நேரத்தில் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்