ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-06-30 11:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள சோத்துப்பாளை கிராமத்தில் இருந்து சொரியம்பட்டி செல்லும் சாலையோரங்களில் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள் வழியாக உயரழுத்த மின்கம்பி மற்றும் தாழ்வழுத்த மின்கம்பிகள் செல்கின்றது. இந்த மின்கம்பங்கள் முழுவதும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடாய் காட்சியளிக்கின்றது. காற்றடிக்கும் நேரத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், கால்நடைகளுக்கு பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்