மின் இணைப்பு துண்டிக்கப்படுமா?

Update: 2024-06-30 11:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட யாதவர் தெரு பெருமாள் கோவில் விவசாய அலுவலகம் சந்திப்பு அருகில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இந்த நிலையில் இந்த தொட்டியின் மின்மோட்டாருக்காக அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்